ஜெர்மன் கணிதவியலாளரும், கோட்பாட்டு இயற்பியல் அறிஞரும், சிறப்பு மற்றும் பொது சார்பியல் கோட்பாடுகள் மற்றும் ஒளிமின் விளைவு குறித்த ஆய்வுகளுக்காக, 1921 ஆம் ஆண்டில் நோபல் பரிசு (இயற்பியல்) பெற்ற அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஏப்ரல் 18, 1955 ஆம் தேதி அதிகாலை 01:15 மணி அளவில், அமெரிக்க நாட்டின், நியூ ஜெர்ஸி, மாநிலம், பிரின்ஸ்டன் நகரிலிருந்த மருத்துவமனையில் உயிர்நீத்தார். அன்று இந்த மருத்துவமனையில் பணியிலிருந்த பெண் செவிலியருக்கு ஜெர்மன் மொழி தெரியாது. எனவே ஐன்ஸ்டீன் ஜெர்மன் மொழியில் ஐன்ஸ்டீன் பேசிய இறுதிச் சொற்களுக்கான பொருள் இந்தப் பெண்மணிக்கு விளங்கவில்லை.
ஐன்ஸ்டீனின் உடல் ஏப்ரல் 19, 1955 ஆம் தேதி, நியூ ஜெர்சி மாநிலம், ட்ரெண்டன் நகரில் தகனம் செய்யப்பட்டது. இவருடைய மகன் ஹான்ஸ் ஆல்பர்ட்டிற்கு, சவப்பெட்டியில் இருந்த தன் தந்தையின் உடல் முழுமையாக இல்லை என்ற செய்தி தெரிந்திருந்தது. “சார்பியல் கோட்பாட்டை உருவாக்கி, அணுக்கரு பிளவு வளர்ச்சியைச் சாத்தியமாக்கிய மூளை” “அறிவியல் ஆய்வுக்காக” அகற்றப்பட்டதாக நியூயார்க் டைம்ஸில் வெளிவந்த ஒரு முதல் பக்க கட்டுரை அறிவித்தது.
Continue reading “ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இறந்த பின்னர் திருடப்பட்ட மூளை குறித்த வியப்பூட்டும் உடற்கூறு கட்டமைப்புகள்”